• முகவரி : A2, மஹாலட்சுமி நகர், நெல்லித்தோப்பு, மாங்காடு, சென்னை - 600122 .
  • தொலைபேசி எண் : +91 89251 22831 | +91 97909 35231
  • sreevadhanam@gmail.com

  • 10.00Am to 6.00Pm
    Sunday By Appointments Only

நம் வாழ்வில் காணும் பலன்கள் அனைத்திற்கும் நாமே எஜமான் ஆகிறோம், அது நன்மை என்றாலும் சரி, தீமை என்றாலும் சரி, அது தரும் பலன்களும் வினோதமானது, விசித்திரமானது மற்றும் அதிசயமானது. அந்தவகையில் மனம், உடல், உயிர் சார்ந்து தான் அதன் தாக்கத்தின் செயல்பாடுகள் இருக்கும். இந்த மனம், உடல், உயிர் ஒன்று சேர்ந்து சராசரியாக எப்பொழுதும் ஒரு நிலையில் மற்றும் சம அளவில் இயங்குவதில்லை, அப்படி இயங்காமல் கிடைக்கும் பலன்கள் தான் மன கோளாறு உடல் கோளாறும் இந்த இரண்டின் அலைகழிப்பால் கிடைக்கும் பரிசே உயிர் செலவு இதை உணர்ந்தவர்கள் நன்மை என்றால் பணிவோடு அதை ஏற்கிறோம், தீமை என்றால் அது தீர வழி தேடி அலைகிறோம், அதில் தீர்வு கிடைக்கப் பெற்று பயன் அடைந்தவர்களும் உண்டு, அதை தேடியே கரைந்து காணாமல் போனவரும் உண்டு. அதாவது வாழ்வை நிறைவாக, முறையாக, முழுமை பெறாமல், நிம்மதி, சந்தோஷம், இன்பம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் உணராமலும் காணாமலும் போகின்றனர். இவ்விதம் உள்ள வாழ்க்கை பயனாளர்களை சரிசெய்யும் திருப்பணியே குருவழி, திரு வழியாக நாம் மேற்கொண்டது அதன் வழியாக நோக்கு வர்மம், சப்த வர்மம், வாழ்வியல் ஆலோசனை தேவைக்கேற்ப உயிர் அரும் மூலிகையின் மூலம், தெய்வீக சிகிச்சை முறை, பிராண சிகிச்சை முறை (pranic healing) மற்றும் நாம் பெரியோர்களால், சித்தர்களால், ஞானிகளால் மற்றும் மகா முனிவர்களாலும், ரிஷிகளாலும் வகுக்கப்பட்ட போற்றப்பட்ட காலத்தால் மறைக்கப்பட்ட மிக உயர் நிலை தியானமான வாழ்வியல் தியானத்தை செயல்வழி தியானத்தையும் இங்கு நாம் வழங்குகின்றோம்.